Sunday, July 31, 2011

en thaalaattu


இந்த தாலாட்டு என் குழந்தைகளுக்காக நான் எழுதி பாடியது.
25  ஆண்டுகளுக்கு பின்
என் தங்கை மகள்
அவள் மழலைக்கு இதைப்
பாடுவதை கேட்ட  போது உளம் மலர்ந்தேன்  .

தாய்கள் தான் மாறுகிறார்
- தாய்மை மாறுவதில்லை
தாலாட்டு  மறைவதில்லை 
என்பது  நிஜம் தான்.! 


இதோ அந்த தாலாட்டு
---------------------------------------------------------------------------------------------



தூங்கு கண்மணி வைர பொன்மணி

நீ தூங்கு


அன்பு கண்மணி  
ஆசை வடிவு        நீ !
எங்கள்  செல்வம் நீ!
நீ தூங்கு



பஞ்சு மெத்தையிலே
 படுத்தால் வலிக்காதோ - எந்தன் 

நெஞ்சினிலே நீ தூங்கு 



இந்த நாடுமே இன்ப மொழியுமே
உன்னால் நலம் பெறுமே
 நீ தூங்கு


- மரியா  சிவா , வேலூர்