Saturday, February 22, 2014

சுட்டுவிரலின்
வெட்டுக் காயம்.!

உதட்டில் தெறித்த 
சுட்ட எண்ணை ..

நழுவி சிந்தி
காலில் விழுந்த
குழம்பின் கொதிப்பு..

நெடி மிளகாய்
அரைக்கையில்
அடுக்காய் வரும்
தும்மல். ..இருமல்.. !

தினம் இல்லை ..!
சிதறிடும் கவனத்தை
பதிவிடும் குக்கர் சூடு..!

வழியும் வியர்வை யுடன்
சமைத்ததை
மேசையில் விரிக்கையில்
மகன் சொல்வான்..
"பார்க்கலையா அம்மா ..
முழங்கையில் மாவு. ! "

" ஒ ..மௌன வலிகளின்
அடையாள தீற்றல் . !

துடைத்து நகர்கிறேன்....
அடுத்தவேளை சமைக்க..!

Thursday, February 20, 2014

" யாரோ " புன்னகை உதிர்க்க 
" யாரோ " இரு கரம் குவிக்க
" யாரோ" தோள் தொட்டு நலம் கேட்க 
" யாரோ" வலிக்க வலிக்க கை குலுக்க.. 

பிரிந்த கல்லூரி நட்பா ?
பிறந்த ஊரின் உறவா ?
அலுவலக தொடர்பா ?
வாடிக்கையாளரா ?

" யாரிவர் யாரிவர் ??"

தவித்து , தடுமாறி
நினைவுக் கிடங்கின்
கருக்கல் இடுக்குகளில்
இன்னாரென அறியுமுன்
என்னைக் கடப்பார் .
அந்த "யாரோ "

அதே நிகழ்வில் ..
"அடடா இவரா ? " என
ஒருவரை
இனம் கண்டு
இரு கை கூப்ப
எத்தனிக்கையில்

"யாரோ" என
என்னை எண்ணி
"இவர் " நகரும் தருணம்

பூக்கத் துவங்கிய
புன்னகை
உறைந்து விடுகிறது
என் உதடுகளில் ..!

-மரியா சிவா .
28-12-2013

உள் உறைந்த 
பனிக் கற்கள்..

மனம் மரத்து 
உடல் நடுங்கும் 
கடுங்குளிர் ...!

அருகிருந்து
கனகனப்பாய்
கதகதப்பைப்
போர்த்தும்
.
.
.

உன் சொற்கள் ..

-காலை வணக்கம்
மரியா சிவா ..

குளிரைப் போர்த்தியது
விடியும்வரை 
இரவு !
வலிந்து கவிழ்த்த உறைகள்
நெகிழ நின்றொளிரும் 
சுயம் ..!
காலை பயணம் துவக்க 
கதிரவன் அருகிருந்துக் 
கையசைப்பேன் ...

முகில்கள் உரசுகையில்
இடியொலி கேட்டு
ரசித்திருப்பேன்..

பின்னெழும் மின்னொளியை
சுட்டு விரலால்
தொடச் செல்வேன்.

சின்னஞ் சிறு மீன்களின்
சிமிட்டல் கண்டு
மெய்சிலிர்ப்பேன்.

இன்னபிற ஏக்கமெலாம்
ஈடேற ..

உடல் மறந்து பறவையாகி
உயரே .. உயரே
செல்கிறேன்

எல்லையிலா பெருவெளியில்
சிறகசைத்து..
சிறகசைத்து ..!
" இனிய காலை வணக்கம் "
- மரியா


கட்டியணைக்க யத்தனிக்கும்
கற்றூண் திண்மை – உன் 
கண்களில் ..!

இளங்கதிர் நின் 
சிறுகரங்கள் ஆணையில்
இடையின்றி இயங்கும் ,
புதுபூமியின் உதயம்
அருகில் , மிக விரைவில் !

காத்திரு கண்ணே ..!
நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை ..!
நம்பியவர் தோற்றதில்லை ..!!


செலுத்திடும் விசைதனில்
நிறுத்தல் இன்றி இயங்கிடும் ..
இறக்கைகள் உயரே பறந்திடும்...!

இடை விடா இயக்கங்களில்
எப்போதேனும் 
களைத்து சரிகையில்

இருப்பை உணர்த்தும்
உடலும் ,
மனம் அறியா
வயதும்.. !

- மரியா

இறுக்கம் சூழ் இலக்குகள் 
நிரப்ப தவிக்கும் ஆழங்கள். 
அமில சுரப்பில் 
அடிமனதில் புளிப்பேற 
அருகில் நெருங்கி
"அழுத்தம் தவிர்" என்றே 
மெல்ல தோள் உரசி
செல்லும் சிறுபறவை. ..!

-மரியா