Wednesday, August 28, 2013

அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து



பள்ளி இறுதி ஆண்டு படிக்கிறேன் .
ஒரு விடுமுறை தினம் .. 
சர்ச்சிலிருந்து பாதர் அழைப்பதாய் சேதி வந்ததும் ஓடினேன்..

அங்கு அறிமுகப்படுத்தப் பட்டேன் அவருக்கு..
சிவந்த நிறம்.. சற்று குள்ள உருவம்..
கை பிடித்து பேசினார்..கருணை வழியும் , மென்மையான குரல்..!
எங்கள் ஊரில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் நிறுவ வந்திருப்பதாய் சொன்னார்.

அதற்குள் , ஊர் மக்கள் நிறைய சேர்ந்து விட, அவர்களுக்கு நான் மொழி பெயர்ப்பாளர் ஆனேன். மக்கள் பேச பேச அதை அவரிடம் ஆங்கிலத்தில் சொல்லி, அவர் சொல்வதை மக்களிடம் தமிழில் சொல்லி..

முதல் அறிமுகம் இப்படித்தான்.

அவர் அன்னை திரேசா..

அதன் பின் அங்கு இல்லம் உருவானது.. பிறகு வந்த கன்னியர்களுக்கு தமிழ் கற்கும் வரை , என் மொழி பெயர்ப்பு பணி தொடர்ந்தது..

கல்லூரி காலத்தில் படிப்பு தவிர எனக்கிருந்த ஒரே distraction அந்த இல்லம் தான்..குழநதைகள், முதியோர் என ஆதரவற்ற நெஞ்சங்களிடையே அன்பையும், நேரத்தையும் பகிர்ந்துக் கொண்டேன்.. அப்படியே இருக்கவும் விரும்பினேன்...!

பிரமிக்க வைக்கும் வாழ்க்கை நெறி கண்டு வியந்துப் போனேன்.. நிறைய கற்றும் கொண்டேன்..!

கல்கத்தாவில் இருந்து வரும் கன்னியர் , அன்னையின் வாழ்த்தை எனக்குத் தெரிவிக்கையில் பறப்பது போல் இருக்கும்.

அன்னை வரும் போது அவருடன் அமர்ந்து பேசியுள்ளேன்.

இன்று வாழ்க்கை முறை மாறி விட்டது...! குடும்பம், குழந்தைகள் என ஒரு புள்ளியில் எல்லாமே குவிந்து விட்டது.

ஆனாலும் அன்னையுடனும், அவர் இல்லத்திலும் கழித்த அந்த கணங்களை வாழ்வின் பொன்னான தருணமாய் இன்றும் மனதில் போற்றுகிறேன்..!

எனக்கு அனை திரேசா ஒருமுறை எழுதி தந்த வாசகம்.. “ Love Jesus with undivided Love “

நெஞ்சம் மறப்பதில்லை ..!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்னையே !

No comments:

Post a Comment