Wednesday, August 28, 2013

பாப்பா பிறந்தாள்..

இமை மூடி உறங்குகையில்
இதழோரம் 
முகிழும் குறுஞ்சிரிப்பு..

ஒடுக்கிய சிறு கைகளில் 
ஒளிந்திருக்கும்
ஒய்யார கனவுகள்.

“ஊ” எனக் குவித்து
எதையோ சொல்ல
விழையும் உதட்டு பூக்கள்..

உதைத்துச் சிணுங்கும்
கால்களின் கீழ்
உழலும் நானும், எந்தன் வீடும் ..!

#கொஞ்ச நாளுக்கு பாப்பா தயவில் நிலைத் தகவல்

No comments:

Post a Comment