Thursday, November 28, 2013

மலை முகட்டில் கவிழ்ந்திருக்கும்
பனி அருந்தும்
பறவையாய் 

அலைசுமந்த கடல் தன்னில்
ஆழம் துழாவும்
சிறு மீனாய்

வனச்சரிவில் விளைந்திருக்கும்
மூங்கில் உரசல்களின்
மென் ஓசையாய்

நதிதீரம் குடியிருக்கும்
நாணல்களில் ஒளிந்திருக்கும்
பெயரறியா உயிரினமாய்

உயரே சிணுங்கும்
விண்மீன்கள் தாங்கும்
வெளியிடமாய்

ஏதேனும் ஒன்றாய்...

அன்றி
எல்லாமுமாய்
உரு மாறவே விரும்புகிறேன் ..!

# "அதற்கு"ப் பிறகு ..

No comments:

Post a Comment