Thursday, November 28, 2013

மிதிவண்டி ஏறி
இருவரும்
மென் மேகங்களில் மிதந்த
வண்ண நாட்கள்..

நூறுகளில் சம்பளம்
ஆயிரமாய் ஆனந்தம்


வாடகைக் கூடு
வாயிலில்
துடைத்து நிறுத்திய
வனப்பு..!

பெயர் கூட சூட்டினோம்
“ தம்பி”

பைல்கள்,
சாப்பாடு பை , காய்கறி பை
மளிகை கூட அதில்தான்.
பின்னால் நான்

சுமைகள் இருபுறம்...
மிதிக்கிற மன்னருக்கு
சுகமோ சுகம்

அம்மா வீடு , அலுவலகம்
திரையரங்கு, கோவில்
" நகர் வலம் "எல்லாமே
நம் “தம்பி”யுடன் தான்.

பின் சீட்டின்
மென்குரல்
இசை கசிய
தினம் தினம்
இன்ப உலா

நிறைமாத சூலுடன்
நிலைத் தடுமாறி
ஒருநாள் விழும் வரை ..!
மறுநாளில் டிவிஎஸ்

நதியோர சோலை போல
பின்
வசதிகள் வளர்ந்ததன
ஆனால்
வசந்தங்கள் மறப்பதிற்கில்லை
#வரலாறு

புகைப் பட உதவி Duraisamy Panchatcharam

No comments:

Post a Comment