Saturday, February 22, 2014

சுட்டுவிரலின்
வெட்டுக் காயம்.!

உதட்டில் தெறித்த 
சுட்ட எண்ணை ..

நழுவி சிந்தி
காலில் விழுந்த
குழம்பின் கொதிப்பு..

நெடி மிளகாய்
அரைக்கையில்
அடுக்காய் வரும்
தும்மல். ..இருமல்.. !

தினம் இல்லை ..!
சிதறிடும் கவனத்தை
பதிவிடும் குக்கர் சூடு..!

வழியும் வியர்வை யுடன்
சமைத்ததை
மேசையில் விரிக்கையில்
மகன் சொல்வான்..
"பார்க்கலையா அம்மா ..
முழங்கையில் மாவு. ! "

" ஒ ..மௌன வலிகளின்
அடையாள தீற்றல் . !

துடைத்து நகர்கிறேன்....
அடுத்தவேளை சமைக்க..!

1 comment:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

    ReplyDelete