Thursday, May 8, 2014

இன்று
-----------

மென் குளிரும்
மெல்லிசையும் சூழ
காலைப் பயணம்.

பூத்தூறல் பொழியும்
மேகங்கள் உடன் உலா.

நெடுஞ்சாலை
புறமிருந்து
ஈர்த்தது சின்ன கடை.

எளிமை, தூய்மை
கனிவும் கலந்த கவனிப்பு.
சுவையான உணவு
சுகமானது.. !

உண்ட பின்
கை கணினியில்
கண் பதித்து
நகர்கிறேன்.

கடை கடந்த
நொடியில்
பின் சிரசில்
இடித்தன

சொல்ல மறந்த
நன்றியும் ,
கொடுக்க மறந்த
புன்னகையும்..

என்ன செய்து என்ன ?
என்னை நான் வெறுத்தேன். !


// 8-5-2014//

No comments:

Post a Comment