Saturday, January 3, 2015

ஆண்டாண்டு அடுக்களையில் நின்னு 
வேண்டியதெல்லாம் சமைச்சாச்சு 
வித விதமாய் சுவைச்சாச்சு .

பெத்தவங்க கிட்டே 
கத்துக் கொண்டது போக
புத்தகம் பார்த்தும
புதுசா நிறைய படிச்சாச்சு.

மகளுக்கு பருப்பு சாதம்
மகனுக்கு கார கிரேவி
யாருக்கு என்ன பிடிக்கும்
என்பதெல்லாம்
மனப்பாடம் செஞ்சாச்சு

எனக்கென்ன பிடிக்கும ?

என்னையே கேட்கையில்
அடிநாக்கில் தங்கி விட்ட
ருசியொன்றை
அசை போட்டது மனசு.

மசக்கை காலத்தில்
மயங்கி இருக்கையில்
கணவர்
புகட்டிய
பொறுக்கும் சூட்டில்
அரிசிக் கஞ்சி
உறைப்பும்
புளிப்புமாய்
புளித் துவையல். ..!


No comments:

Post a Comment