Monday, February 22, 2016

சுட்டுவிரலின்
வெட்டுக் காயம்.!
உதட்டில் தெறித்த
சுட்ட எண்ணை ..
நழுவி சிந்தி
காலில் விழுந்த
குழம்பின் கொதிப்பு..
நெடி மிளகாய்
அரைக்கையில்
அடுக்காய் வரும்
தும்மல். ..இருமல்.. !
தினம் இல்லை ..!
சிதறிடும் கவனத்தை
பதிவிடும் குக்கர் சூடு..!
வழியும் வியர்வை யுடன்
சமைத்ததை
மேசையில் விரிக்கையில்
மகன் சொல்வான்..
"பார்க்கலையா அம்மா ..
முழங்கையில் மாவு. ! "
" ஒ ..மௌன வலிகளின்
அடையாள தீற்றல் . !
துடைத்து நகர்கிறேன்....
அடுத்தவேளை சமைக்க..!

No comments:

Post a Comment