Thursday, February 18, 2016

கோரைப் பாயை
ஊடுருவும்
மண்தரையின் ஓதம்

நடுக்கும் குளிரை 
அதிகமாக்கும்
அம்மாவின்
பழஞசேலை

மரத்து விறைத்த
விரல்களை
இயல்பாக்க
விறகடுப்பின
கங்குகள்

தாழ்வார க்மபியில்
இரவெல்லாம்
தண்ணீர் சொட்டும்
ஒற்றைச் சீருடை
உடல் சூடடில் உலர

எதற்கும் மேலாய்
மசி எழுத்துகள்
கலைந்த
பதிவேடு

பள்ளி காலத்து
மழை
அழைத்து வரும்
அழுத்தங்கள்

இன்று கவிதைதனை
தந்தாலும்
அன்று கவலைகளை


No comments:

Post a Comment