Thursday, February 18, 2016

பிராயத்தில சேமித்த 
ப்ரியங்கள்
வார்த்தையில் மட்டுமா?
வழி நெடுக 
வாழ்க்கையெல்லாம்!






செல்லமாய்
கவியத் துவங்கும்
மாலைப் பொழுது
சின்ன மழலையின்
சன்னமான கேவலென
மென்குரலில்
அழத்துவங்கும் மழை
சன்னலோர
மரங்கள்
பின்தொடர
இலகுவாக்கும்
பயணமும்
இளகிக் கிடக்கும்
மனமும்

#புகைவண்டிக் கவிதை

No comments:

Post a Comment