Sunday, June 16, 2013

கதை கதையாம் .. காரணமாம்

இன்றைய பொழுது விடிந்தது ஒரு கதையின் தரிசனத்துடன்..

தங்கை வீட்டில் இரு குட்டிப் பெண்கள் .
விடுமுறை விட்டபின் ஒரே விளையாட்டு .

கொஞ்சம் ஆக்கப் பூர்வமாய் இருக்க
"ஒரு கறபனை கதை எழுத" முயற்சிக்க சொன்னேன் .

நல்ல கதைக்கு பரிசும் அறிவித்தேன் .

இரண்டு நாள் ஓடி விட்டது
இன்று காலையில் 3ஆம் வகுப்பு படிக்கும்
கேரன் கதையுடன் வந்து விட்டது.

அடுப்பை அணைத்து விட்டு அந்த கதையில் மூழ்கினேன் ..
தெரிந்த கதையை கொஞ்சம் மாற்றி
வேறு திசையில் கொண்டு சென்றிருந்தது .

கதையின் முடிவில் நீதி வேறு.. அழகோ அழகு.!
முத்தமிட்டு , சொன்ன பரிசும் தந்தபின் தான் அடுத்த வேலை !

என் நூலகத்தில் வைத்துக் கொள்வதாய் சொன்னதும்
குழ்ந்தைக்குப் பெருமையாகி விட்டது. .

குழந்தைகள் உலகம் தான் எத்தனை , அழகும் அற்புதமும் நிறைந்தது

அந்த உலகுள் சென்று திரும்பும் தருணங்களை நான தவற விடுவதில்லை ..

" என்னது கதையா?
பதிப்புரிமை வாங்கி பத்திரப் படுத்தியுள்ளேன்
வீட்டுக்கு வாங்க, படித்துக் காட்டுகிறேன் !! "
 — w

No comments:

Post a Comment