Sunday, June 16, 2013

தந்தையர் தினம்

என் தந்தையும் .. என் பிள்ளைகளின் தந்தையும்.!

உடுத்தும் வெள்ளை சட்டை ..
உள்ளம் அதனினும் வெண்மை.
கொண்ட செல்வம் ஏதும் இல்லை
எனினும்
கொடுத்து வாழ்ந்த குணம்..!

ஆலயம் , வீடு, கடை தாண்டி
வேறுலகம் கண்டதில்லை.
வறுமையில் செம்மையும்
எளிமையில் நிறைவையும் கண்ட
என் அப்பா அன்பு அப்பா !!

ஆச்சர்யம் ஆனால் உண்மை ..
என் பிள்ளைகளின் அப்பாவும்
என் அப்பாவும் .
ஒரே நூலில் நெய்த உன்னதங்கள் !
உறவுகள் போற்றும் வீட்டுப் பறவை !

கனவிலும் , நனவிலும்
எம்மை
மனதினில் சுமக்கும்
அன்பின் வடிவம்..

சுமைகளை தனக்கென வைத்து
சுகங்களை எமக்கே தரும்
இனிய உள்ளம்.!

நாணம் தடுக்கிறது ...!
என்ன சொல்ல
பெற்ற குழந்தைகள் போல்
நானும் மகளானேன்.!!
..தந்தையர் தின வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment