Sunday, June 16, 2013

சிரிப்பு

உன்னத அமைதி சூழல்..
உயிர் உருக்கும் மெல்லிசை.
மெய் மறந்து 
இறை நிலை தொடும் தீவிரம்.

ஆயிரம் பக்தர் கூடிய
தேவாலய கூடம்..

சட்டென்ற “டப்” ஒலியும்
ஒற்றைக் குரல் சிரிப்பும்..

விழிகள் சில திரும்பி
புருவம் நெரிக்க..
கை கொட்டி நகைத்த
சுட்டிப்பயல்..!

நெஞ்சுக்குள் கேட்டதுவோ
மற்றோர் உரத்த சிரிப்பு .
அன்னை கையில் தவழும்
இறைமகன் நகைப்பு

#உடைந்த பலூன்.. குழந்தைகள் குதூகலம்.!

No comments:

Post a Comment