Sunday, June 16, 2013

எந்தன்

என்று சொன்னேன் நினைவில்லை
எனக்கு பொம்மைகள் பிடித்தம் என்று,,?

ஐம்பதை தாண்டிய பிறந்த நாளிலும்
எனக்கான பரிசு பொம்மைகள்

தடுத்தால் கேட்காத கணவர்
அவருக்கேற்ற பிள்ளைகள்
அதனால்
சின்னச் சின்ன காரணத்திற்கும்
என்னைத் தேடி வரும் ஒரு பொம்மை .

சட்டைக்கார பார்பி
பட்டுசேலை அழகி
உயர் பட்டம் நான் வாங்கியதும்
சத்தம் போட்டு படிக்கும் குழந்தை..!

புன்னகை சிந்தும்
கண்மணிகள்.. .இவர் ..
சொல்லும்
கதைகள் தனித்தனி !

இறைந்து கிடக்கும் புத்தகங்கள்
இடைஇடையே பொம்மைகள்
இன்னும் குழந்தமை மாறா
எழிலோடு , அழகோடு
எந்தன் வீடு.
 —

No comments:

Post a Comment