Sunday, June 16, 2013

அம்மா.!

அம்மா !
ஒற்றைச் சொல் உலகம்.
என் அம்மா திரேசம்மா என்றழைக்கைப் படும் திரேசா அருள்மணி.
எளிய குடும்பம். 
எதையும் இறைவன் கையில் ஒப்படிக்கும் அமைதியான அப்பா.
பெரிதாக ஆசைகளோ , கவலைகளோ இல்லா நீரோடை.!
ஆனால் அம்மா ?
கடல்!

கல்வி , திறமைகள் வளர்ப்பு ,
சமுக த்தில் சிறந்த இடம்.
சொல்லி சொல்லி வளர்க்கப் பட்டோம்.
இந்த உயரங்கள் , அம்மாவின் கனவும், தியாகமும்..

ஒரு கையில் அம்மா.
மறு கையில் புத்தகம்-என்
கணவர் கை பிடிக்கும்நாள் வரை.

அம்மா எனில்
கேட்கும் வரை காத்திருக்காமல்
ஓடி சென்று உதவும் குணம்.
அறிவால் ஆய்ந்து
அன்பால் முடிவெடுக்கும் திறன்.
உழைப்பே இன்றும் மந்திரம்.

காட்டன் சேலையும் ,
கதைப் புத்தகங்களும் உயிர்.
மணியன் கதைகளை மனப்பாடம் செய்தவர்.!

ஒரு புத்தகத்துக்கான செய்தி இருக்கு.
எதை சொல்ல , எதை விட.?

அம்மாவிடம் கற்றதை
மகளுக்கு கற்று தருகிறேன்.
" இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் "
தாய்மை உள்ளம் கொண்ட அனைவருக்கும்..!

No comments:

Post a Comment