Sunday, June 16, 2013

Way to Man's Heart.!

" Way to Man's heart is through his stomach" என்ற கருத்தில் உடன்பாடு
இருப்பவர் மேலே தொடருங்கள்.

இல்லையேல் அடுத்த நிலைத் தகவல் படிக்க இதைக் கடந்து விடலாம்.

"சமையல் " பெண்களின் உரிமை என்னும் தலைமுறையைச் சார்ந்தவள்.

ஆனால் திருமணம் வரை புத்தகமும் , கையுமாய் இருந்ததால் அன்று வரை என் சமையல் அறிவு சூன்யம்.

பின் தோழிகளிடம் , சகோதரிகளிடம், சித்தி, அம்மா , பாட்டி என தெரிந்தவர்கள் எல்லாரிடமும் நோட்டும் கையுமாய் உட்கார்ந்து ஒரு வழியாய் கொஞ்சம் கற்றுக் கொண்டேன்.

பிள்ளைகள் வளர , வளர இதில் பெரிய ஈடுபாடு வந்தது.

இந்த வரலாறு , பூகோளம் தவிர்த்து விடலாம்.

இப்போது ஓரளவு செய்கிறேன் என கருதுகிறேன்


அதற்கான ஒரு சின்ன டிப்ஸ் இங்கு. ..

என் வழி " மனதால் சமைத்து பார்த்து விடுதல்" அதாவது
"Cooking With the Mind"

எடுத்துக் காட்டாக நாளை காலை சமையல் இவை என் வைக்கலாம் .
"மிளகுப் பொங்கல், சட்னி
எண்ணெய் கத்தரிக்காய், கோஸ் பொரியல், ரசம், தயிர் சாதம் "

(காலையிலே இரண்டு வேளை சமையலும் நடக்கும், விடுமுறை நாட்கள் தவிர்த்து..)

முந்தின இரவு இதற்கான பொருட்களை இருக்கிறதா என பார்த்து
விடுவோம்.

அதன் பின் இந்த உணவுகளை மனக்கண் முன் கற்பனை செய்வேன் இப்படி.

மிளகும் முந்திரியும் விழித்துப் பார்க்கும் பொங்கல்.
வெள்ளை வெளேர் தேங்காய் சட்னி.
எண்ணெயில் சிரிக்கிற கத்தரிக்காய்
தேங்காய் பூ சூடிக் கொண்ட பொரியல்..
தெள்ளத் தெளிவான ரசம்
இஞ்சி, கொத்துமல்லி, கேரட் அலங்காரமாய் கொண்ட தயிர் சாதம்.

இப்படி முன்னிரவு மனக் கண்ணில் கண்ட உணவை
காலையில் சின்னதாய் பாடிக் கொண்டோ (!)
பாடல் கேட்டுக் கொண்டோ சமைத்து விடலாம், சுலபமாய்.

சமையலும் கவிதை போலத்தான்
கற்பனைக்கு எல்லையே இல்லைதான்

பின் குறிப்பு; இப்படி சமையல் முடித்தப் பிறகு தான் காமெடி இருக்கு. !
பிள்ளைகள் " இன்னும் கொஞ்சம் ' innovative, imaginative, colourful, tasty ஆக செய்ய கூடாதாம்மா / " என்பார்கள். இருக்கிற அத்தனை adjectives அடுக்குவார்கள் . சமாளித்தாகனும்.!

No comments:

Post a Comment