Sunday, June 16, 2013

பயணங்கள்

பயணங்களில் 
ஏனோ நான்
உறங்குவதில்லை..!

பேருந்தில் சக பயணி 
தோளில் சரிய
மெல்ல விலக்கி விட்டு
உறங்கி விழும் முகங்களை
வேடிக்கை பார்ப்பதுடன் சரி.!

கணவரோ, பிள்ளைகளோ , ஓட்டுனரோ
மிதமான வேகத்தை
அறிவுறித்திக் கொண்டே செல்வேன்
கார் பயணங்களில்
உறக்கமில்லை. !

இரவுப் பயணம் ..
ரயிலின் தாலாட்டு
தூங்க வைப்பதில்லை.!

ஆனால்..
அப்பாவை இருகரத்தால்
பிடித்துக் கொண்டு
பின் இருக்கையில்
அமர்ந்தவுடன்
உறங்கி விழுந்ததும்

" தூங்க்காதமா" எனப்
பேச்சு கொடுத்து கொண்டே
ஒருகையால் என்னைப் பற்றி
சைக்கிளில் சென்றதும் ....
மட்காத நினைவுகளாய் .....
மனம் முழுக்க..மனம் முழுக்க.!

No comments:

Post a Comment