Wednesday, May 21, 2014

வனப்பு

கணவன் வீடு செல்லும்
மகளின்
கைப்பையில்
ஒளிந்து கொள்கின்றன
அம்மாவின் புன்னகையும்
அப்பாவின் அதிர் சிரிப்பும் . .!

பின்புறமாய் கழுதைக் கட்டி
" இன்று சாம்பாருக்கு என்ன பெயர் ? "
அம்மாவை ஓட்டும்
நையாண்டி இல்லை

தந்தையின் மடியில்
தலை வைத்து
"என்றும் அப்பா பெண் "
எனும் கொஞ்சல் இல்லை.

உடன் பிறந்தவருடன்
" திடும்" என வெடிக்கும்
உப்பு பெறா
சண்டைகள் இல்லை ..

என்ன செய்யலாம் ?

மகளுடன்
விடைபெறும்
இல்லத்தின்
நகைப்பும்,
வனப்பும்.!

1 comment:

  1. சொல்ல முடியாத வலிகள்... காலம் மா(ற்)றும்...

    ReplyDelete