Friday, May 9, 2014



அலையாடும் கடலென
மலை மேவும் காற்றென
இகம் விரவும் ஒளியென
இதழ் விரியும் மலரென

இவையான
இயற்கை நிகழ்வென
இயல்பாக வர வேண்டும் ..
எமக்கான
உரிமையும் ,விடியலும் ..

உயரும் கரத்தினின்று
வழிவது அமிழ்தே எனினும்
வணங்கிப் பருக
வாய்ப்புகள் இல்லை ..!

என்றும்
யாசிப்பை விழைவதில்லை
அரசிகள் ... !

No comments:

Post a Comment