Thursday, May 8, 2014

இன்றைய சமையல் ..
எடுத்து வைத்த புத்தாடை 
அழகுக் குறிப்பு ..
குழந்தை வளர்ப்பு 
அணிகலன்கள் 
எண்ணற்ற பேசுபொருள்

அம்மாக்கள் மகள்களுக்குள்
இழையோடும்
தடைபடா
இடையறா
உரையாடல்கள் ..!!!

‘ என்ன சாப்பிட்டாய் ?’
“ எங்கே இருக்கிறாய்?’
“ முடி வெட்ட கூடாதா”
“ இளைத்துப் போகிறாய் ?”

அம்மாக்கள் –மகன்களுக்கிடையே
சின்னஞ்சிறு கேள்விகள்
சிக்கனமான பதில்கள் என
சொற்கோர்த்து சொற்கோர்த்து
சரசரவென முடியும் உரையாடல்..

கரைந்தும் நெகிழ்ந்தும்
கலங்கித் தவித்தும்
பிரியம் சுரக்கும் உணர்வெல்லாம்
புரிய இயல்கிறது.
பேசும் சில வார்த்தைகளில் ..
அருகில் நின்றாலும்
தொலைவில் சென்றாலும் ..!

# அம்மா –மகன்


No comments:

Post a Comment