Thursday, May 8, 2014

“எப்படி இருக்கே ? “என 
நலம் உசாவும் 
தொலைபேசி அழைப்பு 

“ சாப்டாச்சா ? “ 
ஒற்றைசொல்லில்
கட்டி வைக்கும் குறுஞ்செய்தி ..

நடுவில் தொலைந்த
நட்பொன்று இடும்
நிலைத் தகவல் விழைவு

புகைபடத் தொகுப்பில்
உறைந்திருக்கும்
குறும்பும் குழந்தைமையும்
கொஞ்சும்
மகனின்
சிறுவயது வெண்சிரிப்பு.

மகளுடன் அலைப் பேசுகையில்
பின்னணி இசையென
“ ரியா”வின் குரல்..

நினைவுகளை மீட்டும்
எண்பதுகளின் பாடல் ..!

ஈரம் சுமந்த
கவிதை ..

இது போன்ற
ஏதோ ஒன்று
போதும் ..
என் நாளை இனிமை யாக்க !


No comments:

Post a Comment