Friday, May 9, 2014

இருள்சூழ் வானில் 
எழும் மின்னொளியென
எழிலான “தீபம் “ என்
இல்ல மாடத்தில் சுடர்விட வருகுது...

இருகரம் ஏந்தி
இடையின்றி இறைஞ்சினேன்.
அளவிலா இறையின் கருணை
அமுதென பொழிந்தது ..

இழைத்திட இழைத்திட
மணக்கிற சந்தனமாய்
மனமெல்லாம் சுகந்தம்

"மகிழ்வென" ஒரு சொல்லில்
.உரைத்திட முயன்றேன் ...
பெருகிடும் களிப்பில்
கடலென பொங்கித்
தணிகிறேன்...!

No comments:

Post a Comment